ஒரு பார்வையாளரின் சலனங்கள்
ஓவியம்; ஞானப்பிரகாசம் ஸ்தபதி
பிருந்தாவுக்குக் கல்யாணம் ஆகும்வரை, கம்ப்யூட்டர் சென்டரைப் பார்த்துக் கொள்வதில் ஏதும் பிரச்சினையில்லை. கல்லூரி முடிந்து வந்ததும் சென்டருக்கு வந்துவிடுவாள். பிரிண்டர்களைப் பரிசோதித்துத் தயார் செய்துவைத்தல், போதுமான தாள்கள் இருக்கிறதா எனப் பார்த்துப் போதாதென்றால் ஆர்டர் போட்டுவிடுவது போன்ற வேலை களைப் பார்த்துக்கொள்வாள். கதிரவன் ஒன்பது மணிக்கு மேல்தான் சென்டரைத் திறப்பார். மதியம் கடையைப் பூட்டிவிட்டுச் சாப்பிடப்போய்விடுவார். மாலையில் பிருந்தா வந்த பின்னால் அப்பாவை அனுப்பிவிடுவாள்.
அப்போது போனால் கொஞ்சநேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, காபி, பலகாரம் சாப்பிட்டுவிட்டு ஒருமணி நேரம் கழித்துவந்து அவளை வீட்டுக்கு அனுப்பிவைப்பார். இரவு எட்டு மணிக்கெல்லாம் சென்டரை மூடிவிட்டுக் கிளம்பிவிடுவார். விடுமுறை நாட்களில் மதியத்திற்கு மேல் வந்து நாள்ம