மனம் சோராத போராளி
நன்றி: காமதேனு
வசந்திதேவி (1938, நவம்பர் 8) வழக்கறிஞர் பி.வி. தாஸ்-ஜானகி தம்பதியினரின் மகள். அவருடைய தாத்தா வெ. சர்க்கரை செட்டியார் ஒரு வழக்கறிஞர் மட்டுமின்றித் தீவிர தொழிற்சங்கவாதியும்கூட. பள்ளிக்கல்வியைத் திண்டுக்கல் புனித ஜோசப் பள்ளியில் முடித்து, சென்னை இராணி மேரி கல்லூரியில் இன்டர்மீடியட் படித்த பின் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் பெற்றார். படிக்கும்போது கல்லூரி மாணவர் தலைவர் கே.எஸ். சுப்ரமணியனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். மகன் நரேந்திரா கனடாவில் மெக்கில் பல்கலைக்கழகத்திலும் மகள் அஜந்தா அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள்