இட ஒதுக்கீடு: தலைவிதியை மாற்றும் தீர்ப்பு
முற்படுத்தப்பட்ட சாதிகளிலுள்ள பொருளாதார ரீதியாக நலிவடைந்த வர்களுக்கென 103ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட பத்து சதவீத இடஒதுக்கீடு செல்லும் என ஐந்து நீதிபதி களைக் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வின் பெரும்பான்மை 2022 நவம்பர் 7ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் முதன்முறையாக இடஒதுக்கீடு என்ற கருத்தாக்கம் உருவானது. 1902ஆம் ஆண்டு கோலாப்பூர் மகாராஜாவால் அமல்படுத்தப்பட்டது; பின்னர் 1921இல் மைசூர் மகாராஜாவாலும்! அதே ஆண்டு சென்னை ராஜதானியில் நீதிக் கட்சி அமைச்சரவையாலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. பின்னர் உலகின் பிற நாடுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறுவிதமான இடஒதுக்கீடுகள் அல்லது முன்னுரிமைகள் ஆகியன பாகுபாட்டிற்குள்ளாகியிருந்த சிறுபான்மையினருக்கானவை.
இந்தியாவில் மட்டும்தான் கல்வியிலும் அரசாங்க வேலைகளிலும் பாகுபாட்டிற்குள்ளாகியிருந்த பெரும்பான்மையினருக்காக இடஒது