காலத்தால் களவாட முடியாத எழுத்து
கலை இலக்கியங்களின் உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் மாற்றிப் புதுப்பிக்கும் அல்லது மேம்படுத்தும் வேலையைக் காலந்தோறும் சிலர் ஆரவாரமில்லாமல் செய்துவிட்டு மறைந்துவிடுகிறார்கள். அப்படியானவர்களுள் ஒருவர் விழுப்புரம் பாவாடை இதயவேந்தன் எனும் விழி.பா. இதயவேந்தன். தலித் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். சாதியால் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலை எந்தப் பூச்சுமின்றி நேரடியான மொழியில் கதைகளாகப் பதிவு செய்தவர். அவற்றைக் கலக அழகியலின் மாதிரிகளாக நிலைநிறுத்தியவர்.
தொன்மை உள்ளிட்ட தனது ஏகப்பட்ட பெருமிதங்களில் தமிழ் மயங்கிக்கொண்டிருந்தபோது, தொண்ணூறுகளில் தலித் இலக்கியம் என்கிற ஒரு வகைமை தமிழகத்துக்கு அறிமுகமானது. அது,“பாணன், பறையன், கடம்பன், துடியன் இன்நான்கல்லாது குடியும் இல்லை என்று புறநானூறு பாடிவைத்திருக்கிறதே, நவீனத்துக்கு வந்துசேர்ந்திருக்கும் உங்களிடம் அத்தொல்குடிகளின் வாழ்க்கை, இலக்கியங்களாக இருக்கின்