இறுதித் துளிவரை வாழ்ந்தவர்
இலக்கிய உலகைத் தொட்டுக்கொண்டிருந்த பருவம், வாசகனாக - பார்வையாளனாக. திருச்செந்தூர் தோழர்களின் உறவு பலமாக இருந்தது. காணும் இடங்கள்தோறும் அவர்கள் இருந்தார்கள். தாமரை, தீபம், கண்ணதாசன், கணையாழி போன்ற இலக்கிய நறுமணங்களை நாசி சுவாசித்துக்கொண்டிருந்தது. பா. செயப்பிரகாசத்தின் கதைகளை தாமரை இதழில் வாசிக்கிறபொழுதுகளில் ஏதோ ஒரு புதிய உணர்வு மேவிவருவதை உணர்ந்தேன். “ நம்ம பக்கத்து ஊர்க்காரர்தான் போலிருக்கு” என்கிற எண்ணம் உண்டாயிற்று. கரிசல் மண்ணின் வாடை அடிக்கிறதே? அதற்கும் மேல் அந்தத் தமிழ்நடை அப்போது காணக் கிடைக்காத தன்மைமிக்கதாகவும் இருந்தது.
பின்னர் நானும் எழுத்தாளன் ஆனேன். சூரங்குடி எழுத்தாளர் அ. முத்தானந்தம் அறிமுகம் கிடைத்தபோது, அவர் பா.செ. பற்றிக் கொஞ்சம் சொன்னார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சிறுகதைப் போட்டியை நடத்தியபோது, என் கதைக்கும் பரிசு கிடைத்தது. சென்னையில் பரிசளிப்பு விழா. பரிசை வாங்கிக்கொண்ட