கலை வரலாற்றியல்: தியடோர் பாஸ்கரன் சமூகப் பண்பாட்டுச் சொல்லாடல்கள்
தன்னுடைய சொந்த ஊரான வாணியம்பாடிக்கு நண்பர்களாக நாங்கள் வர வேண்டுமென்று நண்பர் ஆதவன் கோரிக்கை விடுத்திருந்தார். தள்ளிப்போய்க்கொண்டிருந்த அப்பயணம், கல்வி பயில்வதற்காக அவருக்கு வெளிநாட்டு அழைப்பு வந்ததும் விரைவுபட்டது. அவரின் வீடு நகரத்தில் இருந்தாலும் பூர்வீகக் கிராமம் ஊருக்கு வடக்கே, மலைத்தொடருக்குக் கீழே அமைந்திருந்தது. கிராமத்தில் பார்ப்பதற்கு விசேஷமாக எதுவுமில்லை. பின்னால் இருந்த மலைக்கு எங்களை அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தார். மலையில் சிறிது தூரத்தில் அவர் காட்ட விரும்பிய குகையை அடைந்துவிட்டோம். தமிழகத்தின் பல மலைகளிலும் இருப்பதுபோன்ற சமணக் குகை அது; படுக்கைகள் இருந்தன; பீடம் போன்ற சதுரக் கல்லில் கல்வெட்டுக் குறிப்புகள் இருந்தன; குகைக்குள் கட்டப்பட்டிருந்த செங்கற்களாலான சுவர்கள் இடிந்து கிடந்தன; எல்லாவற்றையும் தாண்டிக் குகையின் மேற்பரப்பில் ஓவியங்கள் தீட்டப