7.5% கூர் இருளில் மின்மினி வெளிச்சம்
7.5%
கூர் இருளில் மின்மினி வெளிச்சம்
கட்டுரை
ஜே.ஆர்.வி. எட்வர்ட்
சில புதிர்கள் எளிமையானவையாய்த் தோன்றும். அணுகி அவிழ்க்க முயலும்போது அவற்றின் வீரியம் புரியும். ‘மூத்தது முட்டையா? கோழியா?’ என்பது அப்படியானதொரு புதிர். நான் அப்போது எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் மதிய உணவுக்கான இடைவேளையில் ராஜமணி என்னும் வகுப்புத்தோழன் என்முன் வீசிய புதிர் இது. ‘கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா?’ எனப் புதிரை விவரித்துச்