சற்றுமுன் இடிந்த அரண்மனை
கவிதை
பெரு விஷ்ணுகுமார்
Courtesy: free falling gold-michelle iglesias
சற்றுமுன் இடிந்த அரண்மனை
மீட் மிஸ்டர் மரகதமணி
அரண்மனையின் வாயிற்காவலன்.
இங்குவரும் பயணிகளின் முன்பு
பூனைகள் குறுக்கே செல்லாமல் பார்த்துக்கொள்வார்
அவர் கிடக்கட்டும்,
இங்கிருக்கும் தூண்களைப் பாருங்கள்.
இவை உடல்கொழுத்த ஆச்சரியக்குறிகள்
பர்மாவிலிருந்து நடந்தே வந்தவை
ஓய்விற்காக நின்றுகொண்டிருக்கின்றன
எப்போது என்னாகுமென்று யாருக்கும் தெரியாது - ம்ம்ம்ம்
மீட்