திராவிட இயக்க மீட்பு: சொல்லாடல்களின் மாற்றங்கள்
திராவிட இயக்க மீட்பு:
சொல்லாடல்களின் மாற்றங்கள்
கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்
1990களில் தமிழில் பெரியார் குறித்துப் புதிய கவனம் உண்டானது. ஒரு கழகத்தின் / சித்தாந்தத்தின் அடையாளமாக அறியப்பட்டிருந்த அவரை அதிலிருந்து விலக்கிப் பரந்துபட்ட சிந்தனையாளராக எழுதும் கவனம் என்று அதைக் கூறலாம். மேலும் அது அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி எழுந்த கவனமாகும். அம்பேத்கர் நூல்கள் பல வெளியாகி அவரின் சிந்தனைகள் கவனப்படுத்தப்பட்ட தருணமாகவும் இருந்தது. இந்திய அளவில் மண்டல் கமிஷன் மூலம் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டிற்கான கோரிக்கை, இந்துப் பெருமதவாத எழுச்சி ஆகியவை ஒருப