செல்லப்பன்
செல்லப்பன்
கதை
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி கதைகளின் முழுத்தொகுப்பு 1991 மார்ச்சில் வெளியானது, க்ரியா வெளியீடான அந்நூலுக்கு சுரா எழுதிய முன்னுரைக் குறிப்பு இது.
நான் 1930இலிருந்து 1990வரையிலும் எழுதியுள்ள கதைகள் 52. சராசரி ஒருவருடத்துக்கு ஒன்றேகால் கதை என்பது அவ்வளவு மோசமில்லை என்றே நினைக்கிறேன். இவற்றிலிருந்து 48 கதைகளை இத் தொகுப்பில் சேர்த்திருக்கிறேன். சேர்க்கப்படாத நான்கும் பலவீனமானவையாக இப்போது பட்டன. அவை பற்றிய விபரம். கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் (கல்கி), செல்லப்பன் (கல்கி), நானும் மனிதன் (மனிதன்), தபாலில் வேலை வரும் (தாமரை).
சுரா விலக்கிய நான்கு கதைகள் பின்னர் வெளியான பதிப்புகளிலும் சேர்க்கப்படவில்லை. எனினும் ஒரு படைப்பாளரின் வெளிவந்த