நாட்குறிப்புகள்
நாட்குறிப்புகள்
கு. அழகிரிசாமியின் டயரியிலிருந்து எடுக்கப்பட்டவை.
5 மார்ச் 1951
ஆபீசிலிருந்து ரூ.10--0-0
மாலை திருவல்லிக்கேணிக்குப் போய் மிகப்பழைய இலக்கிய நூல்கள் மூன்று வாங்கிக்கொண்டு வந்தேன். அத்தனையும் சிறந்த நூல்கள். காரைக்குடி கம்பன் கழகத்திலிருந்து கவியரங்கத்துக்கும் பிரசங்கத்துக்கும் என்னை அழைத்திருக்கிறார்கள். இன்றுதான் கடிதம் வந்தது. போக வேண்டும்.
சமையல் ஐயங்கார் ஒரு ரூபாய் திருப்பிக்கொடுத்தார். அவர் இன்னும் தரவேண்டிய பாக்கி ரூ.10--0-0.
6 மார்ச் 1951
காரைக்குடி கம்பன் கழக காரியதரிசிக்குப் பதில் எழுதிப் போட்டேன். வருவதாக அற