கார்ப்போரேட்டுகளின் வேட்டைக்காடாகும் இந்திய விவசாயம்
கட்டுரை
கார்ப்போரேட்டுகளின் வேட்டைக்காடாகும் இந்திய விவசாயம்
க. திருநாவுக்கரசு
‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது’ என்ற சொலவடை விவசாயிகள் அடிக்கடி தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்வது. “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்” என்ற நிலை சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் வர்த்தகம், தொழில்துறை, தொழில்நுட்பம், நிதி மூலதனத்தின் ஆதிக்கம் நிலவும் இந்தக் காலகட்டத்தில் விவசாயம் லாபகரமானதாகவோ மரியாதைக்குரியதாகவோ இல்லை. இதனால்தான் அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகள் ஆண்