கட்டுரை: தி.ஜ.ர
கட்டுரை
தி.ஜ.ர
நான் கண்ட எழுத்தாளர்கள் (தேன்மழைப் பதிப்பகம், 1988) நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை இது.
சென்னையில் வாழ்ந்த காலத்தில் எழுதி, மலேயா காலத்தில் திருத்தி தமிழ் நேசனில் வெளியானது இக்கட்டுரை.
தமிழ்நாட்டில் எழுத்தாளராக வேண்டுமென்று விரும்புகிறவர்கள் சிறுகதை எழுத ஆரம்பிப்பார்கள்; இல்லையென்றால், ஒரு தமிழ்ப் பாடலையோ சில தமிழ்ப் பாடல்களையோ வைத்து இலக்கியக் கட்டுரை எழுத ஆரம்பிப்பார்கள். கதையும் இலக்கியக் கட்டுரையும் தவிர, பிறவகையான கட்டுரைகளும் எழுதச் சாத்தியமுண்டு என்பதைப் பற்றிப் பெரும்பாலானவர்கள் யோசிப்பதில்லை. இதனால்தான், ருசிகரமான கட்டுரைத் தொகுதிகள் அதிகமாக வெளிவராமல்இருக்கின்றன. இப்படிப