கதை: அவனும் அழுதான்
கதை
அவனும் அழுதான்
கு. அழகிரிசாமி
கு. அழகிரிசாமி சிறுகதைகள் முழுத்தொகுப்பில் (பதிப்பாசிரியர் பழ. அதியமான், காலச்சுவடு, 2011) இடம்பெறாத கதை ‘அவனும் அழுதான்.’
கல்கி (டிசம்பர் 25, 1960) இதழில் வெளியான இக்கதையைக் கண்டெடுத்தவர் ஆ.இரா. வேங்கடாசலபதி.
என் அன்புள்ள பிருந்தா,
ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து உனக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னிடமிருந்து இப்படி ஒரு கடிதம் வருமென்று நீ கனவுகூடக் கண்டிருக்கமாட்டாய். நானும்கூட ஒருமணி நேரத்துக்கு முன்புதான் உனக்கு எழுத நினைத்தேன். என்ன எழுதுவது என்று தெரியாமலே கடிதத்தை ஆரம்பித்துவிட்டேன்.