சி.ஜே. மறுபடியும் இறந்துவிட்டார்
அஞ்சலி: எம். வேதசகாய குமார்
சி.ஜே. மறுபடியும் இறந்துவிட்டார்
அ.கா. பெருமாள்
புகைப்பட உதவி: ஜவஹர் ஜி
பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு (2004, மார்ச்) திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரிப் பேராசிரியர் மீரான்பிள்ளை என்னைத் தொலைபேசியில் அழைத்தார். “குமாரின் பணி ஓய்வு உபசார நிகழ்வில் நீங்கள் பேச வேண்டும். அதைக் கருத்தரங்காக நடத்துகிறோம்” என்றார்.
அன்று குமாருடன் காரில் திருவனந்தபுரம் போனேன். அவரது மனைவி வான்மதியும் வந்திருந்தார். அவர் என் தங்கையுடன் படித்தவர். சிறுமியாக இருக்கும்போதே தெரியும். பிரிவுபசார நிகழ