தனித்திருத்தல் என்னும் முடிவிலாப் பயணம்
அஞ்சலி: எல். முனுசாமி
தனித்திருத்தல் என்னும் முடிவிலாப் பயணம்
கிருஷ்ண பிரபு
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கும் முன் காலனிய ஆட்சியாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட கைவினைப் பொருட்களின் உற்பத்திப் பள்ளியை, மரபுக் கூறுகளுடன் நவீனத்தையும் இணைத்து முன்னெடுத்தவர் தேவிபிரசாத் ராய் சௌத்ரி. அதிலிருந்து துளிர்த்த பணிக்கர், தனபால் ஆகியோருக்கு அடுத்து, சுதந்திர இந்தியாவின் முதல் வரிசைக் கலைஞர்களில் முக்கியமானவர் எல். முனுசாமி.
இயல், இசை, நாடகம் என எந்தத்துறையை எடுத்துக்கொண்டாலும் ஒவ்வொரு கலைஞரும் ஒவ்வொரு நிலையால் உந்தப்படுகிறார்கள். அந்நிலை கொண்டு எழுச்சிபெறும் ஆளுமைகளும் உண்டு. தனித்திருத்தலைச் சிறுவயது முதலே விரும்ப