மகா மாயா
கதை
மகா மாயா
குமாரநந்தன்
ஓவியம்: மணிவண்ணன்
இன்பாவின் குரல் காதுக்குள் ஒலிக்கும்போதெல்லாம் ராஜசேகரின் முகம் புன்னகை அரும்பிப் பிரகாசமாகிவிடும். தனக்கும் ஒரு தகப்பன் அந்தஸ்தைக் கொடுத்துத் தன்னை நம்பிப் பிறந்தவள் என அடிக்கடி நினைத்துக்கொள்வான். அப்படியான நினைவு வரும்போதெல்லாம் ஒரு தெய்வத்தை வணங்குவதைப்போலத் தன் மகளை மனத்துக்குள் கைகூப்பி வணங்கிக்கொள்வான்.
நேரம் பத்துமணி ஆகிவிட்டது. இன்னும் அவள் தூங்கியிருக்கமாட்டாள். ‘அப்பா இன்னும் வரலையா, இன்னும் வரலையா, எப்பம்மா வருவாரு’ என நந்தினியிடம் நூறுமுறை கே