ஈழத்து சமஸ்கிருத கல்வி கிரந்த லிபியின் முக்கியத்துவம்
சிறப்புப் பகுதி: தமிழும் வடமொழியும்
ஈழத்து சம்ஸ்கிருத கல்வி
கிரந்த லிபியின் முக்கியத்துவம்
சிவானந்த ஷர்மா
உலகின் மிகத் தொன்மையான இலக்கியங்களில் நன்றாகக் கருதப்படும் ‘ரிக்வேதம்’ சம்ஸ்கிருதத்தின் மூலபாஷையாகிய வேதபாஷையிலேயே அமைந்துள்ளது. ஆரம்பத்தில் பேச்சுமொழியாக இருந்த பிராகிருதம் (புரா - க்ருதம் - முன்பு செய்யப்பட்டது) என்பதும் பின்னர் செம்மையாக்கப்பட்ட சம்ஸ்கிருதம் (சம் - க்ருதம் - நன்குசெய்யப்பட்டது) என்பதும் இந்த வேதபாஷையின் தொடர்ச்சிகளே.
இதிஹாச புராணங்களும் சாஸ்திரங்களும் காவிய நாடகங்களும் ஆகமங்களும் உருவாக்கப்பட்டுள்ளதால் சம்ஸ்கிருதம் ஓர் ஆன்மீக மொழி என அறியப்பட்டாலும் ஆரியப்பட்டர், சுஸ்சுருதரர் முதலிய அறிஞர்களால் எழுதப்பட்ட வானியல், ஜோதிஷம், சத்திர சிகிச்சைகள் உ