தமிழ், சமஸ்கிருத நிகண்டு உறவு
சிறப்புப் பகுதி: தமிழும் வடமொழியும்
தமிழ், சமஸ்கிருத நிகண்டு உறவு
ச. பால்ராஜ்
பொருள் விளங்கா அரிதான சொற்களுக்குப் பொருள் விளக்கம் கூறும் நூல் நிகண்டு. இதற்கும் நவீன அகராதிகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. அகராதிகள் அகரவரிசையில் ஒருசொல் பலபொருள் கூறுபவை; சொல்லுக்குச் சொல் பொருள் வழங்கும் முறைமையில் அமைந்திருக்கும். நிகண்டு நூல்கள் நூற்பா வடிவில் சொற்களுக்குப் பொருள் விளக்கம் கூறும் சொற்கோவை, சொற்களஞ்சியம் போல அமைந்திருக்கும். அவை இலக்கண, இலக்கியச் செய்திகளைக் கொண்டு புத்திலக்கியம், உரையாக்கத்திற்கு இன்றியமையாத பனுவலாக அமைகின்றன. அத்தகைய தொன்மையான நூல்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் முற்காலந்தொட்டே தோன்றியுள்ளன.
தமிழ், சமஸ்கிருத மொழிகளுக்குள் கொள்ளலும் கொடுத்தலும் நெடுங்காலமாக நடைபெற்று வருகின்றன. இருமொழிகளின் இலக்கியம், இலக்கணம், சொற்கள் முதலியவற்றின் வரலாறுகள் அவற்ற