காந்தியும் ஆயுர்வேதமும்
காந்தியும் ஆயுர்வேதமும்
கட்டுரை
சுனில் கிருஷ்ணன்
ஓவியம்: ஜி. குப்புசாமி
வானத்திற்குக் கீழே அனைத்தையும் பற்றி காந்தி சில கருத்துகளைக் கொண்டிருந்தார். எழுதி, நிறுவி, முன்னகர்ந்து என ஓயாமல் அலையடித்துக் கொண்டிருந்தது அவருடைய கருத்துலகம். இத்தனை பரந்து விரிந்த கருத்துலகம் என்பதாலேயே அவரை வரையறுப்பதில் சிக்கல்களும் எழுகின்றன. நமக்குத் தேவையான காந்தியை மேற்கோள்களின் ஊடாக வெட்டியொட்டி உருவாக்கிவிட முடியும். காந்தி இங்கு எல்லாருக்கும் தேவைப்படுகிறார். சில நேரங்களில் கரம் கோக்கவும் சில நேரங்களில் எதிர் நிறுத்தவும்.
காந்திக்கு இந்தியப் பண்பாட்டின்மீது, கிழக்கத்திய நாகரிகத்தின்மீது பெருமதிப்பு உண்டு. ஒருவகையில் அது காலனியக் காலகட்டத்தில்