பிளாக் நம்பர் 11 அதிகாரத்தின் கொலைக்களம்
கட்டுரை
பிளாக் நம்பர் 11
அதிகாரத்தின் கொலைக்களம்
பா. பிரபாகரன்
ஓர் ஆய்வுக்கட்டுரைக்காக Holocaust பற்றிய நூல்கள் சிலவற்றைப் படித்துக்கொண்டிருந்தபோது இப்படி இந்தியாவில் நடப்பது சாத்தியமா என்றே எண்ணத் தோன்றியது. நிச்சயமாகவில்லை. அஸ்ஸாமில் முதல் தடுப்பு முகாம் தொடங்கப்பட்டு விட்டது. பெங்களுரிலும் திறக்கப்பட விருக்கிறது என்னும் செய்திகள் நம் நாட்டிலும் நடக்கலாம் என்ற எண்ணத்தை ஊட்டுகின்றன. கட்டட அமைப்புகளும் மேற் கூரைகளும் கண்காணிப்புக் கோபுரங்களும் இரும்பு வேலிகளும் ஜெர்மனியை நினைவுபடுத்துகின்றன. பிரைமோ லெவியும் பேராசிரியர் எல் வீஸலும் நாசி