புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட மௌனி ஆக்கங்கள்
மௌனி படைப்புகள் முழுத்தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் 2010இல் வெளியிட்டது. அதே நூல் காலவரிசைப்படி நிரல்படுத்தப்பட்டும் திருத்திச் செம்மைப்படுத்தப்பட்டும் 2011இல் வெளியானது. திருத்தப்பட்ட பதிப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கிக் கடிதம் எழுதிய மௌனியின் மகள் ஞானம் மகாலிங்கம் மௌனியின் இருபத்துநான்கு கதைகளும் இரண்டு கட்டுரைகளும் மட்டுமே அவரது ஆக்கங்கள் என உறுதிப்படுத்தியிருந்தார். அதற்கேற்பவே முழுத் தொகுப்பு உருவானது. மௌனியின் படைப்புகள் இந்த இருபத்தாறு ஆக்கங்களுடன் நிறைவுகொண்டது என்றே தீர்மானமாக எண்ணச் செய்தது.
அண்மையில் நண்பர்கள் கல்யாணராமன், ஏ. தனசேகர் இருவரும் கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம் ஆகியோரது கதைகளைத் தேடிக் கண்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த தீர்மானம் மகிழ்ச்சிகரமாகத் தோல்வியுற்றது. வாசகர் வியப்படையும் வகையில் மௌனியின் தொகுக்கப்படாத ஆக்கங்கள் சிலவற்றை நண்பர்கள் கண்டடைந