ஜூன் 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
ஜூன் 2026
    • கட்டுரை
      விஜய் எனும் புலப்பாடு
      மறைந்த மதச்சார்பின்மை: தமிழ்நாட்டு அரசியல் சொல்லாடல்களின் மாற்றங்கள்
      ஈரான் போர் எங்கே நிற்கிறது இந்தியா?
      ஊடக மொழியாளுமையர்
      நீட் என்னும் வன்கொடுமை
      புவியின் சாட்சி
    • அஞ்சலி: ரகு ராய் (1938 & 2026)
      காலத்தைப் படம்பிடித்தவர்
    • பத்தி இன்றும் என்றும் - 2
      அரசியல் ஜூகல்பந்தி: ஏழு அரசியல் கூட்டாளிகள்
    • நேர்காணல்: இரா. முரளி
      “தமிழர் மெய்யியல் பன்முகமானது”
    • அஞ்சலி: இ. சுந்தரமூர்த்தி (1942 - 2026)
      நடமாடும் ‘கூகுள்’
    • கற்றனைத்தூறும்-17
      எலிப்பந்தயமோ கல்வி?
    • பதிவு
      அரவிந்தன்:காலச்சுவடுக்குப் பேரிழப்பு
      தன்யனானவர்
    • அஞ்சலி: துரை. சீனிச்சாமி (1944 -2026)
      என் குருநாதர்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கதைகள்
      நரகத்தில் போர்ஹெஸ்
    • முன்னுரை
      மொழிபெயர்ப்புக் கலையின் நுட்பங்கள்
    • கவிதைகள்
      கவிதா முரளிதரன் கவிதைகள்
    • தலையங்கம்
      ‘தற்குறி’களின் வருகை அல்லது இருதுருவ அரசியலின் வீழ்ச்சி
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜூன் 2026 அஞ்சலி: துரை. சீனிச்சாமி (1944 -2026) என் குருநாதர்

என் குருநாதர்

அஞ்சலி: துரை. சீனிச்சாமி (1944 -2026)
கோ. சந்தனமாரியம்மாள்

பட உதவி: மு. இளங்கோவன்

பேராசிரியர் துரை. சீனிச்சாமி என்ற அந்த உயர்ந்த மனிதர் மறைந்தார் என்பதை ஏற்க முடியவில்லை. என்னுடைய ஆய்வு நெறியாளர் மட்டுமல்ல, வாழ்க்கையை யதார்த்தமாய் நகர்த்தக் கற்றுக்கொடுத்தவர். புளியங்குடிக்கு அருகில் உள்ள சிந்தாமணியில், 1944ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் நாள் துரைராஜ், அன்னம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். தந்தை பள்ளி நிர்வாகி;  தாய் அன்னம்மாள் அதே பள்ளியில் ஆசிரியர். புகுமுக வகுப்பினைத் திருநெல்வேலி  சேவியர் கல்லூரியிலும் இளங்கலைப் பட்டப் படிப்பினை விருதுநகர், செந்தில்குமார நாடார் கல்லூரியிலும் பயின்றவர். முதுகலைப் படிப்பினைக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்றார். முதுகலையில் பல்கலைக்கழக அளவில் பதக்கம் பெற்றுப் பெருமை சேர்த்தவர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ‘கம்பராமாயாணத்தில் இயற்கை’ என்ற தலைப்பில் அ.ச. ஞானசம்பந்தனின் நெறிகாட்டுதலின்கீழ் முனைவர் பட்டம் பெற்றவர். காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக்  கல்வித்துறையில் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் 1982இல் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையில். பேராசிரியராகவும்  துறைத்தலைவராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார்.

நான் ஜேஆர்எஃப் (JRF)  தேர்ச்சி பெற்று ஆய்வியல் நிறைஞர் பட்டத்தில் பத்து மாதம் கழிந்துவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் முனைவர் பட்டப் படிப்பில் சேரவில்லை எனில் ஆய்விற்கான உதவித்தொகை பெற இயலாமல்  காலாவதி ஆகும் என்கிற நிலையில் உடனடிச் சேர்க்கைக்காக  1998 இல் ஜூலை மாதம்  தமிழ்ப் பல்கலைக்கழகம் சென்றேன். ஆய்வியல் நிறைஞர்  படிப்பில் காப்பியத்தில் ஆய்வு நிகழ்த்தியதால் துரை. சீனிச்சாமியைப் பாருங்கள் என கு.வெ. பாலசுப்ரமணியன் சொன்னார்.  பிறகுதான் அந்த உயர்ந்த மனிதரைப் போய்ப் பார்த்தேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். தென் மாவட்டம் என்றதும் நானும் நெல்லைச் சீமைதான், சிந்தாமணி என்றார். அது எங்கே இருக்கிறது என்பதெல்லாம் அப்போது தெரியாது. ஆனால் நெல்லை தெரியும். ‘ஆதியூர் அவதானி சரிதம்’ என்ற நூலை என் கையில்  கொடுத்தார்.  1995ஆம் ஆண்டு நடந்த எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் ‘முதல் தமிழ்ப் புதினம்’ என்று வெளியிடப்பட்ட நூல். சிட்டி, சிவபாதசுந்தரத்தின் முன்னுரையுடன் விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. “ஒரு நல்ல ஆய்வாளர் கிடைச்சா இத குடுக்கணும்னு வச்சிருந்தேன். இதைப் படிச்சிட்டு வா.  சிறுசா இருக்குன்னு நெனச்சுறாத விசயங்கள் நெறைய இருக்கு.” அன்றே விண்ணப்பத்தில் கையொப்பம் இட்டுத் தந்தார். ‘கதைக் கவிதை மரபில் ஆதியூர் அவதனி சரிதம்’ என்ற தலைப்பில் பதிவுசெய்தாகிவிட்டது.

நாவல்களில் உளவியல் சிக்கல்கள் குறித்து விரிவாகக் கருத்துக்களைப் பகிர்வார். கையில் நோட்டு, பேனா இல்லாமல் அவர்முன் அமர்ந்ததில்லை. உளவியல் அணுகுமுறையை ஓராண்டுக்கு மேல் விளக்கியிருக்கிறார். இக்கால இலக்கிய வடிவங்கள் எல்லாம் மேலைநாடுகளிலிருந்து வந்தவை; ஆங்கில நூல்களைப் படி என்பார். மூன்றாம் ஆண்டில்தான் எழுத ஆரம்பித்தேன். ‘கதை உரை மரபும் புதினமும்’ என்ற தலைப்பில் நூறு பக்கம் எழுதிக் கொடுத்தேன். முதல் வரியில் பச்சை மையில் கோடிட்டு அப்படியே திருப்பி அனுப்பிவிட்டார்.

ஆறு மாதங்கள் கழிந்த பிறகு முதல் இயல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ‘ஆதியூர் அவதானி சரிதம்’ மட்டும் பத்தாது ‘பிரதாப முதலியார் சரித்திரம்’, ‘கமலாம்பாள் சரித்திரம்’, ‘தீனதயாளு’ இப்புதினங்களை எடுத்து முடிவுகளை மீண்டும் ஆய்வுக்குட்படுத்தி முடிவுரையையே ஆய்வுரையாக அமைக்கச் சொன்னார். 

மூன்று மணிநேரப் பயணத்தில் தென்காசி, பாவூர்சத்திரம் சென்று அவர் வீட்டை (அன்னம்மாள் நிலையம்)  நெருங்கினேன். 20.04.26 இல் உயிரை நீத்த மனிதர் மூன்று நாளாய்ப் பேழைக்குள் மகனுக்காகக் காத்திருந்தார். தாமதமாகச் செய்தியறிந்த நானும்  (22.04.26)  அவரைப் பார்க்கச் சென்றேன். தாமதம் எனக்குப் பார்க்க வழி விட்டதாக  எண்ணிக்கொண்டேன். பனை மரத்தில் பாதி உயரம் இருக்காரே மனுசன் எனச் சொல்வார்கள். வேகமாய் நடக்கும் மனிதர். யாரிடமும் பகையும் இல்லை, நெருக்கமும் இல்லை என வாழ்ந்தவர். கண்ணாடிப் பேழைக்குள் உறங்கிக்கொண்டிருந்தார். கால்மாட்டில் பிள்ளைகளோடு பிள்ளைகளாய் அவர் படைத்த புத்தகங்களான ‘அந்தி’, ‘உரித்த யானை’, ‘காப்பியக் கொள்கைகள்’ முதலானவை வரிசையாய் அணிவகுத்து நின்றன.

ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட மனிதர் மெலிந்த தேகமாய்ப் படுத்திருந்தார். அம்மாவின் கையைப்  பற்றி “சந்தனமாரியம்மாள்” என்றேன். “கோவில்பட்டிதானேம்மா.” கண்ணீர் பெருகத் தலை அசைத்தேன். “அமெரிக்கா வந்தாலும் அவங்க போற ஒரு இடம் நூலகம்தான். காலை போனா மாலைதான் வருவார். நடந்தே வீட்டுக்கு வந்துருவார்.” கண்ணீரோடு அம்மா கூறும்போது அவரின் வாசிப்பு ஆர்வம் வியக்கவைத்தது. அவர்  மத அடையாளத்தை என்றும் காட்டியதில்லை. சிலுவை தாங்கிய பேழைக்குள் படுத்தபடி விண்ணுலகம் புறப்பட்டார்.

கோ. சந்தனமாரியம்மாள், கோவில்பட்டியிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறையில் இணைப் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

               மின்னஞ்சல்: gsminiyan@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.