கல்வியைத் தொற்றிய கொரோனா
எங்கள் தெருவில் இருக்கின்ற பள்ளிசெல்லும் சிறுவர்கள் கொரோனா காலங்களில் தங்களின் பெரும்பொழுதை கிரிக்கெட் விளையாடித்தான் கழித்தார்கள். ஒருநாள் அவ்வாறு விளையாடிக்கொண்டிருக்கையில் பந்தைப் பிடிப்பதற்காக எக்குத்தப்பாக விழுந்த ஒரு சிறுவனுக்குக் கை கடுமையாக முறிந்தது.
சிறுவனின் ஏழைப் பெற்றோரால் எவ்வளவு முயன்றும் மகனுடைய கை முறிவைக் குணப்படுத்த முடியவில்லை. இறுதியில் மருத்துவர்கள் அச்சிறுவனின் ஒரு கையை முழங்கை அளவுக்கு நீக்கிவிட்டார்கள். கொரோனாவின் முதல் அலை முடிவடைவதற்குள்ளாக அச்சிறுவன் தன் கையை இழந்துவிட்டான்.
பெருந்தொற்றுக் காலங்களில் வீட்டில் தனிமையில் இருந்த பல சிறுமிகள் பெரியவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளான செய்திகள் ஊடகங்களில் அதிகப்படியாகவே வெளியாயின. ஒருவேளை அந்தச் சிறுவனோ, அந்தச் சிறுமியோ அந்நேரத்தில் பள்ளியில் இருந்திருந்தால் அவர்களுக்கு அப்படி நேர்ந்திருக்காது. இந்தியா முழுவதும் உள்ள