நோயச்சத்தில் கல்வி முன்னும் பின்னும்
கொரோனா பெருந்தொற்றுக் காலம் மனிதர் வாழ்வில் என்றும் நீங்காத் தழும்பாகவே இருக்கும்படிக்கு மரணபயத்தைக் காட்டிவிட்டது. இக்காலகட்டம் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உடல்நலம், மனநலம் எனச் சமூகத்தில் முன்னரே இருந்த ஏற்றத்தாழ்வுகளை இன்னும் பெரிதாக்கிச் சிக்கலாக்கியிருக்கிறது. பள்ளிகளை அதன் கட்டுமான, தொழில்நுட்ப வசதிகளைக்கொண்டு தரம் பிரித்தால் அதிலும் ஏழை, நடுத்தர, மேல்தட்டு வர்க்கங்கள் உண்டு. கல்வி சமமாகக் கிடைக்கவும் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ஆர்வலர்கள் தொடர்ந்து பேசி அம்முயற்சிகளின் கனி காணும் தருணத்தில் இப்பெருந்தொற்று அதனை அறவே ஒழித்திருக்கிறது.
சமூக மனிதர்களை உருவாக்கும் அலகுகளான குடும்பமும் பள்ளியும் அந்தந்தக் கால அழுத்தங்களுக்கு அசைந்துகொடுத்துத் தம்முள் சிறு மாற்றங்களைச் செய்துகொள்ளும். அப்படியொரு அழுத்தத்துள் நாம் போராடும் காலமிது. ஆசிரிய அதிகாரமும் பாடப் புத்தகங்களும் தொடர்ந்து கேள்