நீல்மணியும் மாஸோவும்
நீல்மணி புகான் தாமோதர் மாஸோ
எல்லா விருது அறிவிப்புகளும் சிறிதும் பெரிதுமான சர்ச்சைகளுக்கு இலக்காகின்றன. இந்திய மொழிப் படைப்புகளுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதையொட்டியும் சலசலப்புகள் ஏற்படுவது உண்டு. தனியார் அறக்கட்டளை அளிக்கும் விருது என்றபோதும் ஞானபீட விருது அவ்வப்போதைய அரசியல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படுவதாக இந்திய மொழிப் படைப்பாளர்களும் விமர்சகர்களும் ஆட்சேபம் தெரிவிப்பது வழக்கம். 2019ஆம் ஆண்டுக்கான விருது மலையாளக் கவிஞரான அக்கித்துக்கு (அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி) வழங்கப்பட்டது. அக்கித்தம்