மகாராஜா வீழ்த்தப்பட்ட கதை
நிகழாது எனக் கருதியிருந்த அந்த தேசியப் பெருந்துயரம் கடைசியில் நிகழ்ந்தேவிட்டது. அரசு நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா குழுமத்துக்கு விற்பனை செய்த துயரம்! ஏர் இந்தியாவை வாங்கும் ஏலத்தில் டாடா குழுமம் வென்றிருப்பதாக 2021 அக்டோபர் 8ஆம் நாள் நரேந்திர மோதி அரசு அறிவித்து இன்னொரு முறை நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏலத்தொகை வெறும் 18,000 கோடி ரூபாய். இதில் 15,300 கோடி ரூபாய் ஏர் இந்தியாவின் சில கடன்களை அடைப்பதற்கு. அரசுக்குக் கிடைக்கவிருப்பது 2700 கோடி ரூபாய். இத்தொகையைப் பெற்றுக்கொண்டு ஏர் இந்தியாவின் மிச்சமுள்ள கடனையும் அடைக்கும் பொறுப்பு அரசுடையது. விற்பனை நடைமுறைகள் டிசம்பர் இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசத்தின் மதிப்புமிக்க சொத்து கைவிட்டுப் போவதால் அதிர்ச்சி, துக்கம் அல்லது கவலையால் தாக்கப்பட்டோர் மிகச் சிலரே பலரும் மகிழ்ந்துகொண்டாடியிருக்கிறார்கள். இன்னும் பலர் இதனைத் தேசபக்தியின் அம்சமாக