ரைனா
கதை
ரைனா
அனார்
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
இரண்டு நட்சத்திரங்களிடையே அவளுக்கொரு ஊஞ்சல் இருந்தது. தென்திசைவானின் கருநீல மென்பரப்பில் அவளுக்கே இன்னதென்று தெளிவாகத் தெரியாத ஒரு நீண்ட வால்வெள்ளியைப்போன்றது. அவளது ஊஞ்சல். அவள் கண்விழித்தபடியே காணும் கனவுகளில் அந்த வால்வெள்ளியும் ஒன்றா அல்லது அது எப்போதும் ஆடும் ஊஞ்சல் விளையாட்டா? மரச்சிலாகைத் துவக்கால் விளையாட்டுக்குச் சுட மற்றவர் விழுந்து இறந்துகிடப்பதைப் போன்ற விளையாட்டா அது அல்லது விக்கிவிக்கிச் செத்து விழுந்த கோழிக்குஞ்சை உள்ளங்கைக்குள் வைத்துக்கொள்வதைப் போன்றதா? ரைனாவுக்கு நிகழும்போது மட்டும்