பரோஸ்மியா
கதை
பரோஸ்மியா
மனோஜ் வெள்ளநாடு
பானு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுச் சென்றபோது நண்பர்களிடமிருந்து அன்பளிப்பாகக் கிடைத்த டபுள் ப்ளாக் விஸ்கி பாட்டில்கள் இரண்டு இருந்ததையும் சேர்த்து வாஷ்பேஸினின் தொண்டைக்குழிக்குள் கொட்டிவிட்டிருந்தாள். அற்பமானதொரு விஷயத்தைப் பேச ஆரம்பித்தபோது தொடங்கிய வாக்குவாதம் இப்படிப்போய் முடியுமென்று நான் நினைக்கவேயில்லை. பானு கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டுச் செல்வதும் மூன்றாவது நாள் திரும்பி வருவதும் வாடிக்கையாகிவிட்டதால் எனக்கு அது பெரிதாகப் படவில்லை. ஆனால் வாஷ்பேஸினின் எச்சில் படிந்த குழாய் வழியாகப் பாய்ந்து பார்வதி புத்தனாற்றைக் கடந்து இந்நேரம் ஆக்குளம் காயலைச் சென்றடைந்திருக்கும் விதேசி போதையைக் க