ஈழத்துப் போர்க்கால நாவல் கதையாடல்களும் முயற்சிகளும்
கட்டுரை
ஈழத்துப் போர்க்கால நாவல் கதையாடல்களும் முயற்சிகளும்
அனோஜன் பாலகிருஷ்ணன்
ஈழத்துக் கவிதைகள் அடைந்த உயரத்தை உரைநடை இலக்கியம் அடையாததை ஈழ இலக்கியத்தை அணுகுபவர்களால் அனுமானிக்க முடியும். ஒருவகையில் இது உண்மையாக இருந்தாலும் புத்தாயிரத்துக்குப் பிற்பாடு உரைநடை இலக்கியம் வளர்ச்சிப் போக்கை எட்டியது. ஈழத்தில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது உடனடி உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்குக் கவிதைகள் பொருத்தமாக அமைந்தன. நிலம் மீதான ஏக்கம், விரட்டியடிப்பு, படு