ராம்மோகன் ராயின் ‘சுவிசேஷப் புஸ்தகம்’
கட்டுரை
ராம்மோகன் ராயின் ‘சுவிசேஷப் புஸ்தகம்’
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
வருடம் 1820. லண்டனில் தீன் முகம்மது என்ற இந்தியர் ஆங்கிலேயர்களின் சிகைகளைச் சுத்திகரிக்கும் சவக்கார நுரையில் தலைகழுவுவதை முதலில் அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு கல்கத்தாவில் ஆங்கிலேய ஆண்டைகளின் அரிய பொக்கிஷமான ஆங்கில வேதாகமத்தைப் பரிசுத்தமாக்குவதில் இன்னுமோர் இந்தியர் ஈடுபட்டிருந்தார். அந்த இந்தியர் ராஜா ராம்மோகன் ராய் (1772-1833). அவரின் திருப்புதலில் வந்த நூல் : ‘இயேசுவின் அறிவுறுத்தல்கள்.’ இந்த நூலின் முழுத் தலைப்பு: ‘The Precepts of Jesus: The Guide to Peace and Happiness; extr