நீதியை விழுங்கும் சாதி
கட்டுரை
சாத்தான்குளம்
நீதியை விழுங்கும் சாதி
சந்தியா ரவிசங்கர்
செல்போன் கடை உரிமையாளர்களான ஜெயராஜ் (58) அவருடைய மகன் பெனிக்ஸ் (31) இருவரும் சாத்தான்குளம் போலீசாரால் காட்டுமிராண்டித் தனமாக அடித்துக் கொல்லப்பட்டதற்கு முன்பே வேறொரு இளைஞரும் அதேபோன்ற தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்.
சாத்தான்குளத்திலிருந்து பதின்மூன்று கி.மீ. தொலைவிலிருக்கும் பேயன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான மகேந்திரன் (29). கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டிருந்த துரைராஜ் என்பவரின் தம்பி என்பதுதான் மகேந்திரன் இழைத்த குற்றம். துரைராஜ் தலைமறைவாக இருந்தார். எனவே போலீசார், துரைராஜை எச்சரிப்பதற்காக மகேந்திரனை மே 25 அன்று கூட்டிச் சென்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து அடித்துத் துன்புறுத்தி அனுப்பினார்கள். மகேந்திரன் உள்ளூர் மருத