பாப் சாந்தி
கதை
பாப் சாந்தி
பெருந்தேவி
கதவுக்கு வெளியே யாரோ ஸ்விட்சில் வைத்த கையை எடுக்காமல் ஒலிக்கவிட்டிருந்த அழைப்புமணியின் தொடர் நாராசம் தாங்காமல், பாதிக் குளியலில் வேகவேகமாக நைட்டியை அணிந்தவாறு பாத்ரூமிலிருந்து ஓடிவந்து மூச்சிரைக்கக் கதவைத் திறந்தால், பரிச்சயமே இல்லாத ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள்.
“ஏய் எப்பிடி இருக்க,” என்று என்னை நெட்டித்தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள். “இந்தாடி.” மூன்று பைகளில் பழங்கள், இனிப்புகள், ஒரு பையில் குர்தாவோ, சுடிதாரோ. ரெடிமேட் ஆடைகளுக்கென்றே பிரசித்திபெற்ற கடைப் பை அது.
“ஒரு மாத்தமில்ல ஒன்கிட்ட. அதே கண்ணு, அதே மூக்கு” என்று தன் நகைச்சுவைக்குத் தானே சிரித்துக்கொண்டவளை யாரென்று எனக்கு அடையாளம் தெரியவில்லை. என் வீட்டின் முன்னறையைத் தன் அகல விழிகளால் ஒரு சுற்று சுற்றிப் பார்த்தாள். “சுத்தமா