அந்தரத்தில் கல்வி
கட்டுரை
அந்தரத்தில் கல்வி
தி. பரமேசுவரி
இயல்பான சூழலிருந்திருந்தால் இந்நேரம் இங்கே பள்ளிகள் திறந்திருக்கும்; வகுப்புகள் நடந்திருக்கும். ஆனால் கரோனா நோய்த்தொற்றுக் காரணமாக மார்ச் இறுதியில் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஏப்ரல், மே மாதங்கள் விடுமுறைக்காலமாதலால் தேர்வுக்காலச் சிக்கல்கள் தவிர்த்துப் பெரிதாக வேறேதும் எழவில்லை. ஜூன் மாதம் பள்ளிகள் திறந்து சிட்டுகள்போல் பிள்ளைகள் துள்ளிக்குதித்துச் செல்ல வேண்டிய பருவம்; அது தப்பிப் போயிருக்கிறது. ஜூன், ஜூலை முடிந்து ஆகஸ்டிலும் பள்ளிகள் திறக்குமா, வாய்ப்பிருக்குமா என்று பார்த்திருக்கும் சூழல்.
கல்வி நிறுவனங்களின் திறப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் சூழலில், தனியார்ப் பள்ளிகள் இணைய வகுப்புகளைத் தொடங்கின. நோய்த்தொற்று காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக முடங்கியிருக்கும் நிலையில் பல்வேறு கோணங்களிலும் விவாதங்கள் எழுந்திருக்கி