திராட்சைக் கொத்து மூக்குத்தி
கதை
திராட்சைக் கொத்து மூக்குத்தி
எஸ். செந்தில்குமார்
1
செந்தட்டிக்காளையும் பொன்னுத்தாயும் பட்டறைக்கு முன்னால் வந்துநின்று விறகுக்கட்டை இறக்கிவைத்தார்கள். அவர்களுக்காகக் காத்திருந்த மாதிரி அப்பா நிமிர்ந்து உட்கார்ந்தார். இரண்டுபேரும் பட்டறையின் சுவரில் விறகுக்கட்டை நட்டுக்குத்தலாகச் சாய்த்துவைத்தார்கள். அவர்கள் சுமந்துவந்த இரண்டு விறகுக்கட்டுகளும் இரட்டைப் பிறவிகளைப் போலிருந்தன. மேல்பக்கம் பெரிய கட்டாக இருந்து கீழ்ப்புறம் கூம்மாச்சியாக ஒடுங்கியிருந்தது. செந்தட்டிக்காளை, கட்டிலிலிருந்த சாக்குப் பையைப் பிரித்ததும் மாம்பழம், கொய்யாக்காய், எலுமிச்சங்காய், பச்சிலைகளும் பித்தளை தூக்குவாளிப் பையிலிருந்து வெளியே வந்தன. பழங்களின், இலைகளின் கலவையான மணம் உமியோட்டுப் புகைச்சலையும் மீறிக் கமகமத்தது.
<img alt="" src="/media/magazin