"பாலியல் குற்றச்சாட்டை விசாரித்துத்தான் தீர வேண்டும்"
நேர்காணல்
“பாலியல் குற்றச்சாட்டை விசாரித்துத்தான் தீர வேண்டும்”
கிருபா. கி
கிருபா. கி, சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆங்கிலத்தில் எழுதுபவர். பதினொரு ஆண்டுகளுக்கும் மேலாக தி ஹிந்து, கேரவன், இந்தியன் எக்ஸ்பிரஸ், வயர் ஆகிய அச்சு, இணைய இதழ்களில் திரைப்படங்கள், கலாச்சாரம் தொடர்பான பத்திகளை எழுதி வருகிறார். ‘பெண்களின் பார்வையில் சினிமா’ என்ற பத்திக்காக 2017 ஆம் ஆண்டின் லாட்லி விருதைப் பெற்றார்.
‘மிடூ’ பிரச்சினையில் குற்றம் சாட்டப்பட்ட பாடலாசிரியர் வைரமுத்துவின் பாலியல் அத்துமீறல்களைப் பற்றி
கிருபா.கி சில்வர்ஸ்க்ரீன் ஜூன் 5, 2020 இதழில் விரிவான புலனாய்வுக் கட்டுரையை எழுதி வெளியிட்டிருந்தார். இந்து தமிழ் திசை நாளிதழ் வைரமுத்துவின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஜூலை 12 2020 அன்று சிறப்புப் பக்கத்தை வெளியிட்டது. பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்