மோசவலை: இருபதாம் நூற்றாண்டு அரசியல் சொல்லாடல்
கட்டுரை
நான்கு பிரதிகள்
மோசவலை
இருபதாம் நூற்றாண்டு அரசியல் சொல்லாடல்
ஸ்டாலின் ராஜாங்கம்
இரணியன்
ஞானத்திலும் வீரத்திலும் பண்பிலும் ஓங்கிய தமிழ் அரசன் இரணியன். அவனது ஒரே மகன் பிரகலாதன். அவனுக்கு இளவரசன் பட்டம் கட்டுவதற்கும் முன் உலகப்பயணம் அனுப்புகிறான் அரசன். இளவயதினனான பிரகலாதன் இப்பயணம் மூலம் உலகஞானம் பெறுவான். அதற்குப் பின்னர் பட்டம் ஏறுவதே சரியாயிருக்கும் என்பது இரணியனின் எண்ணம். இதற்கிடையில் தமிழகத்தில் குடியேற நினைக்கும் ஆரிய கூட்டத்தினர் அதற்குத் தடையாக இருக்கும் இரணியனை அழிப்பதற்கான தருணத்தினை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இதற்காக உலகப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரகலாதனைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கின்றனர். கள்ளமில்லா நெஞ்சினனான பிரகலாத