பூனைக்குட்டிகளைத் தடவித்தருவது. . .
கவிதை
இசை
பூனைக்குட்டிகளைத் தடவித்தருவது...
பூனைக்குட்டிகளைத் தடவித் தருகையில்
கொதிக்கும் சமுத்திரம் வாளிக்குள் தூங்குகிறது.
புற்றுக்கட்டிகள் மெல்ல மெல்லக் கரைகின்றன
பூனைக்குட்டிகளைத் தடவித் தருகையில்
உலகம் இதமாகிறது.
பொக்கிஷம் தென்பட்டவுடனே
முகமூடிக் கொள்ளையரும் தென்பட்டுவிடுவதால்
நமக்குப்
பூனைக்குட்டிகள் அவசியம்.
மகிழ்ச்சிக்குச் செத்த ஒரு மனிதன்
அதை
“அநாதைரட்சகா..!”
என்று
கொஞ்சிக்கொண்டிருப்பதை
ஒளிந்திருந்தால்
நீங்கள் பார்க்கலாம்
மனிதர்க