சிவகாமி
கதை
சிவகாமி
எம். கோபாலகிருஷ்ணன்
ஓவியங்கள்: மணிவண்ணன்
1
மீதமிருந்த சாண உருண்டையைத் தண்ணீரில் கரைத்தாள் சிவகாமி. பந்தல் முகப்பில் ஊற்றினாள். குனிந்து விளக்குமாற்றால் வழித்துச் சீராக்கி நிமிர்ந்தவள் திண்ணையோரத்தில் தலையைக் குத்தி உட்கார்ந்திருந்த கணேசனைப் பார்த்தாள். காலையிலிருந்து அப்படியேதான் உட்கார்ந்திருக்கிறான். அவன் குடித்துவிட்டு வைத்திருந்த காபி தம்ளரின் விளிம்பில் ஈக்கள் பறந்தமர்ந்தன. “நீ கௌம்பு. எனக்கு வேலைக்கு நேரமாச்சு.”
சிவகாமியின் குர