மனமூலையில் ஒரு காட்டுப்பூனை
கவிதை
மா. காளிதாஸ்
Courtesy: Satyajit Ray
மனமூலையில் ஒரு காட்டுப்பூனை
சுற்றிச்சுற்றி வருகிற பூனைக்கு
இந்தப் பக்கமா அந்தப் பக்கமாவென
தாவலில் நிகழும் தடுமாற்றம்
சர்வ ஜாக்கிரதைக்கான முன்னோட்டம்.
மீச்சிறு உயிரியை
இடது முன்னங்காலால் ரசித்து ரசித்து அடித்துக் கொல்லும் லாவகம்தான்
சில ‘சமயங்’களில் தீர்ப்புக்கான ஒத்திகை.
கொஞ்சலான ‘மியாவ்’ மூலம் இணைக்கு விடும் தூது
பாலியல் அடித்தளத்திற்கான பச்சைப்பொய்.
தடயங்கள் ஏதுமின்றிக்
கடைசிச் சொட்டையும் பருகிச் செல்லுத