பெருச்சாளிகள்
கதை
பெருச்சாளிகள்
சித்துராஜ் பொன்ராஜ்
ஓவியம்: செல்வம்
கையிலிருந்த பணத்தையெல்லாம் சூதாடி முடித்த பிறகு இருவரும் சாலையோரமாகக் கால் அகட்டி அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த பழைய கடைவீட்டின் மேல் தளத்திலிருந்து அவ்வப்போது மங்கலான குரல்களும் பலத்த சிரிப்பொலியும் கேட்டன.
போலீஸ்காரர்கள் வருகிறார்களா என்று கண்காணித்துக்கொண்டிருந்த ஒல்லிப்பையன் கடைவாசலில் இறக்கிவைக்கப்பட்டிருந்த மரப்பலகைகள்மீது சாய்ந்தபடி நின்றிருந்தான். அவன் வாயோரத்தில் பல்குத்தும் குச்சி நீட்டிக்கொண்டி