பண்டைத் தமிழகமும் சீனமும்
கட்டுரை
பண்டைத் தமிழகமும் சீனமும்
ந. அறிவரசன்
இந்தியாவும் சீனாவும் மிகவும் தொன்மையான நாகரிகங்களைக் கொண்டவை. இவற்றின் பண்பாடு, கல்வி, அறம், நீதி, தொழில்நுட்பம் முதலியவற்றைப் பிறநாடுகள் இன்றும் பின்பற்றிக்கொண்டிருக்கின்றன. பிற நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழும் இந்நாடுகள் தங்களுக்குள்ளே பல ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, புத்தர் இந்தியாவில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார். இந்தியாவில் பிறந்தாலும் அவருடைய கருத்துகள் இலங்கை, மியான்மர், கம்போடியா, சீனா போன்ற நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. புத்தரின் சமகாலத்தில் வாழ்ந்த கன்பூ