தணியாத கனல்
[அஞ்சலி] கே.ஆர். கௌரியம்மா (1919 - 2021)
தணியாத கனல்
மத்யமாவதி
கௌரியம்மா என்று மலையாளிகளால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட களத்தில்பறம்பில் ராமன் கௌரி என்ற கே.ஆர். கௌரி 102ஆவது வயதில் காலமானார். கேரளத்தில் பொதுவுடைமை இயக்கத்தை நிறுவிய முன்னோடிகளில் ஒருவர். தேர்தல் மூலம் அமைந்த உலகின் முதலாவது கம்யூனிஸ்ட் அமைச்சரவையின் உறுப்பினர். ஜனநாயகக் கேரளத்தின் முதல் பெண் அமைச்சர். மாநிலத்தில் நிலச் சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் பங்காற்றியவர். சாதியத் தளையிலிருந்து மக்களை விடுவிக்கப் போராடியவர். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்காகப் பணியாற்றியவர். பெண்களின் போர்க்