‘துக்கத்தைக் குறை; சந்தோஷத்தை விரிவுபடுத்து’
[அஞ்சலி] கி. ராஜநாராயணன் (1923 - 2021)
‘துக்கத்தைக் குறை; சந்தோஷத்தை விரிவுபடுத்து’
பெருமாள்முருகன்
ஓவியம்: மணிவண்ணன்
கி.ராஜநாராயணனை முதலில் வட்டார வழக்கு அகராதியாளராகவே அறிந்தேன். இளங்கலை பயின்றுகொண்டிருந்த காலத்தில் (1983 - 1986) நாட்டுப்புறவியல், மொழியியல் ஆகிய துறைசார் பாடங்களின் வழியாக வட்டார வழக்கு, கிளைமொழி என்பவற்றைக் கற்றேன். நாட்டுப்புறவியல் பாடம் கற்பித்த ஆசிரியர் கி. நாகராஜன் அவர்களின் ‘வீட்டுப்பாட’ அறிவுறுத்தல்படி