படைப்புத் திறன் என்னும் விபத்து?
தமிழ் சினிமாவில் இருப்பவை, இல்லாதவை என்று பட்டியலிட ஆரம்பித்தால் அது முடிவின்றி நீளும். நகைச்சுவை, இசை, பாடும் குரல்கள், திறமையான நடிகர்கள், ஒளிப்பதிவு முதலானவற்றில் திறமை படைத்த கலைஞர்கள் எனப் பல விஷயங்களைப் பாராட்டாகச் சொல்லலாம். இல்லாதவற்றில் கலைத் தன்மைக்கும் படைப்புத் திறனுக்கும் முதலிடங்களைத் தாராளமாக வழங்கலாம்.
அண்மையில் வெளிவந்த ‘கோலி சோடா 2’ படத்தை வைத்து இதைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்தப் படம் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்கிய ‘கோலி சோடா’ என்னும் படத்தின் சாயலை அழுத்தமாகக் கொண்டது.
கோலி சோடாவின் கதை எளிமையானது. வலியவர்களால் பாதிக்கப்படும் எளியவர்கள் வலியவர்களுக்குப் பாடம் புகட்டுவது. கோயம்பேடு சந்தையில் உதிரி வேலைகளைச் செய்துவரும் சிறுவர்களுக்கு அங்குள்ள பெரியதாதா ஒருவருடன் எப்படியோ பிரச்சினை ஏற்பட்டு விடுகிறது. தாதாக்களுக்கே