செப்பிடு வித்தைக்காரனின் மாயக்குடுவை
சொல் காயப்படுத்தி வீழ்த்துகிறது ஒருவனை.
சொல் பறிக்கிறது மற்றொருவனின் அரசாங்கத்தை.
சொல்லை உய்த்துணரும் ஒருவன் எவனோ
அவனுக்கே அனைத்தும் இனிதாக முடிகிறது.
நகரவாசிகளை விழுங்கினேன்
மெல்ல மெல்ல
ஒவ்வொருவராய்
வாயிலிட்டு மென்று விழுங்கினேன்.
முதலில் பாட்டியை,
பின்னர் அம்மாவை.
அடுத்ததாகச் சகோதரனை.
மாமனைத் தின்றேன்
மைத்துனனை விழுங்கினேன்.
மாமனாரையும்
பிறசுற்றத்தாரையும் சாப்பிட்டபின்னர்
மென்று விழுங்கினேன்
நகரவாசிகள் அனைவரையும்.
கபீர் சொல்கிறேன்
இத்தனை பேரையும்
விழுங்கிச் செரித்தப் பின்தான்
எனது தலைவனின்
வீடடைந்தேன்.
செப்பிடு வித்தைக்காரனின்