 |
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு : பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகமும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும்
நபோரு கராஷிமா, ம. இராசேந்திரன், வா. செ. குழந்தைசாமி-ஐராவதம் மகாதேவன் தமிழில்: க.பூரணச்சந்திரன்
பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தின் தலைவன் என்னும் முறையிலும் தமிழ் மக்களையும் அவர்கள் பண்பாட்டையும் நேசித்துத் தனது வாழ்க்கையைத் தமிழாய்வுக்குச் செலவிட்டவன் என்னும் முறையிலும் எனது ஒரே மனநிறைவு என்னவென்றால், கோயம்புத்தூரில் சென்ற மாதம் நிகழ்ந்த, அரசு ஒருங்கிணைத்த, அரசியல் சார்பான மாநாட்டில் பங்கேற்காமல் இக்கழகம் தனது ஆய்வுச் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொண்டது என்பதுதான்.
கட்டுரை: விக்கிலீக்ஸ்: ஊடகச் சுதந்திரத்தின் உச்சம்
க. திருநாவுக்கரசு
சில சமயங்களில் கற்பனைகளை விட உண்மைகள் அதிசயமானவை என்று சொல்லப்படுவதுபோல் ஜூலியன் அஸாஞ்சின் வாழ்க்கை யும் விக்கிலீக்ஸ் வலைதளம் செயல் படும் விதமும் ஜான் கிரிஷாம் நாவல் களைவிடப் புதிர்கள் நிறைந்தவை.
கட்டுரை: விக்கிலீக்ஸ்: ஊடகச் சுதந்திரத்தின் உச்சம்
க. திருநாவுக்கரசு
சில சமயங்களில் கற்பனைகளை விட உண்மைகள் அதிசயமானவை என்று சொல்லப்படுவதுபோல் ஜூலியன் அஸாஞ்சின் வாழ்க்கையும் விக்கிலீக்ஸ் வலைதளம் செயல் படும் விதமும் ஜான் கிரிஷாம் நாவல்களைவிடப் புதிர்கள் நிறைந்தவை.
கட்டுரை: தலித் அதிகாரிகள்: குறுக்கப்படும் சமூகநீதி
ஸ்டாலின் ராஜாங்கம்
உமாசங்கர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குத் திமுக அரசாங்கம் அளிக்கும் பதில் பொதுச்சமூகத்தின் அக்கறைக்குரிய தாகும். ஆனால் அரசாங்கம் மௌனம் சாதிப்பதன் மூலமும் சப்பைக்கட்டுக் கட்டுவதன் மூலமும் மக்களை ஏமாற்ற முயல்கிறது.
ஆளுமை: முரளிதரன் என்னும் விளையாட்டுத் திருவுரு
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
உங்கள் நினைவுகளைச் சற்றுப் பின் நகர்த்தி ஜூலை 1983க்கு வாருங்கள். இந்தமுறை இன்னொரு சிங்களக் கும்பல். இந்தத் தடவை வெறியும் துவேஷமும் அவர்கள் முகங்களில் தெரிகின்றன. முரளியை அவர்கள் தூக்கிக்கொண்டாடவில்லை. அவரு டைய வீட்டையும் அவர் தகப்ப னாருக்குச் சொந்தமான பிஸ்கட் தொழிற்சாலையையும் எரித்தார்கள்.
சிறுகதை: கரகு பெரி ஜா
இராம. முத்துகணேசன் ஓவியங்கள்: சந்தோஷ்
இவ்வளவு தூரம் வந்துவிட்ட பின்பும் இன்னும் தீராத ஏதோவொரு ஏக்கம் எனக்குள் இருக்கிறதென உணர்ந்தேன். என் தேவைகள் யாவும் குறைந்துவிட்டன. எதையுமே மனசு சந்தோஷத்திற்கும் துக்கத்திற்கும் இடைப்பட்ட சமநிலை உணர்வில் பார்க்கக் கற்றுக்கொண்டது. ஆனாலும் எதையோ தேடுகிறேன்.
கட்டுரை: குறிஞ்சிப் பாட்டு மலையின் பாடல்
க. பூரணச்சந்திரன் ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
குறிஞ்சிப் பாட்டில் விளக்கப்படுவது களவுக்காதல். அது கற்பில் (திருமணத்தில்) முடிய வேண்டும் என்பதற்காகத் தோழி செய்யும் செயல், அறத்தொடு நிற்பது. இது ஒன்றுதான் தமிழ்ப் பண்பாடா, அல்லது அப்பண்பாட்டின் மிகமுக்கியமான அம்சமா என்னும் கேள்வி எழுகிறது.
கவிதைகள்
கோகுலக்கண்ணன் சே. பிருந்தா
|
 |
கட்டுரை: மூடிக்கிடக்கும் கதவுகளுக்குப் பின்னால்
மு. புஷ்பராஜன்
“நாவலுக்குள் உலவும் பெண்கள் என் உலகில் என்னோடு சகபயணி களாக இருந்துகொண்டிருப்பவர்கள்” என்னும் சல்மாவின் கூற்றைப்போல் பெண்களின் உலகமே நாவலில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இரண்டாம் ஜாமங்களின் அரசிகள் பெண்களேதாம்.
நேர்காணல்: சை. பீர்முகம்மது
கே.ஜி. மகாதேவா நன்றி: தினக்குரல், 16 மே 2010
நான் தமிழை நேசிப்பவன். 52 ஆண்டுகள் இலக்கிய எழுத்துப் பணியில் உலகம் பூராவும் சுற்றி 28 மாநாடுகளில் கலந்துகொண்டவன். எந்த நோக்கத்துக்காக மாநாடு கூட்டப்படுகிறதோ, மாநாட்டின் வெளிப்பாடுகள் அந்த இலக்கைச் சென்றடைய வேண்டும் என்பதில் நான் முனைப்போடு இருப்பவன்.
கட்டுரை: வட்டாரம் கடந்த மேட்டிமைவாதம் அல்லது கெலம்பு, காத்து வர்ட்டும்
அரவிந்தன்
படித்த, நாகரிக வளர்ச்சி பெற்ற மக்களின் வாயிலோ காதுகளிலோ நுழையக் கூடாத அநாகரிக மொழியாகவே சென்னைத் தமிழ் பலராலும் கருதப்பட்டுவருகிறது. படிக்காத, பாமரத்தனமான, பண்பாட்டின் கடைநிலையில் உழல்பவர்களின் மொழியாகவே சென்னைத் தமிழ் தமிழகத்தின் பொதுப்புத்தியில் உருவகப்படுத்தப் பட்டுள்ளது. சென்னைத் தமிழை ரசிக்கும் சிலர்கூடத் தட்டிக் கொடுக்கும் மனப் பாங்கோடுதான் அதை அணுகுகிறார்கள்.
கட்டுரை: நீதிக்குத் தப்பும் காவல் துறை அநீதங்கள்
எம். ரிஷான் ஷெரீப்
இலங்கையில் காவல் துறை எனப்படுவது, பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாகவும் அங்கு நீதியைக் காப்பதற்குப் பதிலாக, மரணத்தைத் தேடித் தருமிடமாகவும் மக்கள் மனதில் ஆழப் பதிந்தாயிற்று. லத்திக் கம்போடு மட்டும் நின்றுவிட்டிருந்த பொலிஸார், ஈழக் கலவரத்துக்குப் பிறகு துப்பாக்கியாலும் தண்டனை வழங்கத் தொடங்கியிருக்கின்றனர்.
கட்டுரைத் தொடர்: பசுமைப் புரட்சியின் கதை - 14 மாயச் சுழலில் மாட்டிக்கொண்ட விவசாயம்
சங்கீதா ஸ்ரீராம்
பசுமைப் புரட்சியைத் தொடக்கிவைத்த விதைகள், இரசாயன உரங்களைக் கொட்டிப் பயிர்செய்தபோது மட்டுமே உயர்விளைச்சலைக் கொடுத்தன. நிலத்தில் உப்பு தங்கிவிட, இயல்பாகவே மண்வளத்தைப் பாதுகாத்துவந்த நுண்ணுயிர் கள் மற்றும் மண்புழுக்களின் உலகம் சிறிது சிறிதாகச் சுருகி, காணாமல்போனது. இதனால், இரசாயன உரங்களின் பயன்பாடு படிப்படியாக அதிகரித்துக்கொண்டே போனது.
பதிவுகள்: கண்டன இலக்கியம், சென்னை
பெ. பாலசுப்ரமணியன்
மதிப்புரை: வடக்கேமுறி அலிமா
களந்தை பீர்முகம்மது
மதிப்புரை: முறிமருந்து
பாவண்ணன்
சு.ரா. பக்கங்கள்
பணிவின்மை, ஓர் ஆசிரியராக இருந்தும்கூட உபதேசம் செய்யாமலிருப்பது - இரண்டும் ஆற்றூரின் சிறப்பியல் புகள். ஆற்றூர் சதா பயணத்திலிருப்பவர். ஒன்று - ஊர்களுக்கிடையில். இன்னொன்று மானசீகமான பயணம்.
கடிதங்கள்
தலையங்கம்
|
 |