|
கட்டுரை: மோடி மந்திரம்
சமஸ்
நம்முடைய முதலாளிகளுக்கு இன்று மோடி தேவைப்படுகிறார். மன்மோகன் சிங் அரசு பன்னாட்டு நிறுவனங்களின் கையாள் என்று நாம் குற்றஞ்சாட்டுகிறோம், ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் மன்மோகன் சிங் போதுமானவராக இல்லை அல்லது அவருடைய தேவைக்கான காலம் முடிந்துவிட்டது.
கட்டுரை: கார்ப்பரேட் இந்தியா
கண்ணன்
இந்தியாவை ஆளப்போவது யார் என்பதை முழுவதுமாக நிர்ணயிக்கும் அதிகாரம் இந்தியக் கார்ப்பரேட்டுகளிடம் இருப்பதாக நம்ப வலுவான காரணிகள் இல்லை. அவர்களிடம் பணம் இருக்கிறது. ஊடக அதிகாரம் இருக்கிறது. இவை இரண்டுமே அரசியலுக்கு மிக முக்கியமானவை. இருப்பினும் இவை இரண்டும் இருந்தால் ஓட்டுகளைச் சரிக்கட்டிவிடலாம் என்ற பொதுவான கருத்து எனக்கு இல்லை.
நினைவுகூரல்: முள்ளிவாய்க்கால் 4ஆம் ஆண்டு தலைமுறை
சேரன்/‘காடாற்று’
கட்டுரை: மருத்துவ ஊர்தி ஓட்டுநர்
ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் தமிழில்: அகிலன் எத்திராஜன் ஓவியங்கள்: ரோஹிணி மணி
யாரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடவேயில்லை. அந்த அளவிற்கு மரணத்தைப் பார்த்துவிட்டதால், குண்டு அவர்களைத் தாக்கவில்லை என்றால், தப்பித்தாயிற்று என்று விட்டேற்றியாக இருக்கும் மனநிலைக்குப் பழகிவிட்டனர்.”
கட்டுரை: மகாவம்சம் பீடித்த மாந்தர்
திசராணி குணசேகரா ஆங்கிலத்திலிருந்து தமிழில்: மணி வேலுப்பிள்ளை
கௌதம சித்தார்த்தரின் பௌத்தம் சிங்கள - பௌத்தமாக, மகாவம்சம் என்னும் நூலின் புதிய மதமாக மாற்றப்பட்ட தருணம் அது. அவிசுவாசிகளுக்கு எதிரான போர் தீவினையற்ற போரே என்று, நல்வினைப் போரே என்று, சிலுவைப் போர்களையும் புனிதப் போர்களையும் போன்று இன்ப சுவர்க்கம் எய்துவதற்கான நேர்ப்பாதையே என்று திருவாய் மலர்ந்தருளப்பட்ட வேளை அது.
கட்டுரை: சீற்றம் பொதிந்த பதிப்பு
அருந்ததி ராய் தமிழில்: மணி வேலுப்பிள்ளை
ஒருவரின் குற்றம் இங்குச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும் அவர் தூக்கிலிடப்பட்டார்!
கட்டுரை: எஸ்.வி. சகஸ்ரநாமம் நூற்றாண்டு மேடையில் மலர்ந்த இலக்கியக் கனவு
ரவிசுப்பிரமணியன்
பாரதியின் பாடல்களில் பெரும் ஈர்ப்பு கொண்ட அவர் பாரதியின் வரியை இப்படி மாற்றிச் சொல்லிக்கொள்கிறார். “எனக்குத் தொழில் நாடகம். நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்.”
நேர்காணல்: “மனித உரிமைப் போராட்டங்களின் பயனை அரசியல் கட்சிகள் அறுவடை செய்கின்றன” - நீதிபதி சந்துரு
நேர்காணல்: தேவிபாரதி, செல்லப்பா, மண்குதிரை தொகுப்பு: செல்லப்பா
தமிழகத்தில் என்கவுண்டர்கள் மிகப் பரவலாக நடத்தப்படுகின்றன. மக்கள் மத்தியில் விரைவான தீர்ப்பு வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் நீதித் துறையோ மிக மெதுவாக செயல்படுகிறது. எனவே என்கவுண்டர்கள் நியாயமானவையாக மக்களுக்குப் படுகின்றன.
|
கவிதைகள்
இசை ஓவியங்கள்: ராஜேந்திரன்
நேர்காணல்: தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை - சில தெளிவுகள் தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத் தலைவர் டி. பாலசுந்தரம் அவர்களுடன் ஒரு மின்காணல்
மின் பற்றாக்குறை தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது. வேளாண்மை, தொழில், வணிகம், சேவை ஆகிய எல்லாத் துறைகளிலும் அதன் தாக்கம் உள்ளது.
சிறுகதை: சகபயணி
இரவி அருணாசலம் ஓவியங்கள்: ஞானப்பிரகாசம்
ஓர் இராணுவத் தாக்குதலில் தமிழரசியக்கா வீரச் சாவடைந்துவிட்டார். இரட்டைப் பின்னல் கட்டித் தொப்பி அணிந்து வரிச்சீருடையில் புன்னகையுடன் புகைப்படத்தில் நின்றார். மனது கலங்கியது.
அஞ்சலி: சினுவா அச்செபெ முன்னோடிக் கதை சொல்லி
ஜைனபு ஜாலா
நைஜீரிய அரசு அவருக்கு அளிக்கவிருந்த தேசிய கௌரவத்தைப் பேராசிரியர் அச்செபெ மறுத்தார். “அந்த வாய்ப்பை மறுப்பதற்கான காரணம், முதல் முறையாக வாய்ப்பு உருவானபோது என்னை விட்டுவிட்டார்கள். அதையே மறுபடியும் எனக்கு அளிப்பது பொருத்தமற்றது. எனவே நான் வருத்தத்துடன் அந்த வாய்ப்பை மறுக்கிறேன்” என்றார்.
காலச்சுவடு 150 - தொடரும் பயணம்: காற்றின் பிரகாசம்
அனார்
அன்று என் புத்தகத்தின் அட்டை நிறமும் என் ஆடையின் நிறமும் ஒன்றாக இருந்தன. நான் அன்றெல்லாம் அதே நிறத்திலேயே சிரித்துக்கொண்டிருந்தேன் . . .
புத்தக மதிப்புரை: எழுதப்படாத வலிகள் ஒலிக்காத இளவேனில் (கவிதைத் தொகுப்பு)
இரா. மோகன்ராஜன்
வாசிப்பு: நவீன பெண் எழுத்தின் தயக்கமிலாத தொடக்கம்
நித்ய ஸந்யாஸ்
வாசிப்பு: புது வாசிப்பைக் கோரும் கவிதைகள்
மண்குதிரை
கவிதைகள்
நீலகண்டன் ஓவியங்கள்: ஞானப்பிரகாசம்
கட்டுரை: சுதந்திரச் சந்தையின் சுவரொட்டிப்பாவை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
தாட்சர் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் மெதடிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்தவர். அவருடைய தகுதியும் வர்க்கமும் மாறியபோது அரசு ஆதரிக்கும் இங்கிலாந்து திருச்சபையில் அங்கத்தினரானார். ஆனால் இவர் கடைபிடித்த கிறிஸ்தவம் கருணை, மன்னிப்பு, மீட்பு பற்றியதல்ல.
கண்ணோட்டம்: 40வது இலண்டன் இலக்கியச் சந்திப்பில் தலித்தியம், பெண்ணியம்
எம். பௌசர்
என்னைத் திடீரென ஒரு ஆணாதிக்கவாதியாகச் சித்தரிப்பது இவர்கள் கொண்டுள்ள அரசியல் உள்நோக்கத்தின்பாற்பட்டது என்பதும் இந்த அறிக்கைக்கு பின்னாலிருந்தவர்களுக்கும் எமக்குமிடையே கடந்த காலத்திலும், சமகாலத்திலும் இருந்து வருகின்ற அரசியல் முரண்பாடுகளை ஒட்டியதாக இவர்களால் முன்னெடுக்கப்படும் அபத்த நாடகம்
எதிர்வினை: பெரியார்: ஒரு பார்வை - விவாதம்
புதியமாதவி ப்ரவாஹன்
நீரோட்டம்
கண்ணன்
தலையங்கம்
கடிதங்கள்
|