கனவு
அன்று எங்களிடம் குறைவில்லாத பணம் இருந்தது. எங்களிடம் என்றால்... எங்கள் தாத்தாவிடம்... அப்பாவிடம்... பிறகு என்னிடமும். எல்லோருக்கும் வீடு வாசலெல்லாம் ஒரே இடம்தான்; பரம்பரையாக வந்த வசதி அல்ல; தாத்தா கையை ஊன்றிக் கர்ணம் அடித்திருந்தார். அப்பாவுக்குச் சம்பாத்தியத்தில் அத்தனை சிலாக்கியம் இல்லை. ஆனால் இருப்பதைக் காப்பாற்றி என்னிடம் ஒப்படைத்தபோது பெரிய வீடும் விவசாய நிலங்களும் கால்நடைகளும் சொல்லிக்கொள்ளும்படி இருந்தன. எங்களின் பணியாட்கள் சொல்வார்கள்.. “எங்க சென்மம் இப்படியே இங்கயே கரஞ்சுடுணும் எசமான்..” என்று. எசமான் என்பது உங்களின் புரிதலுக்காக. அவர்கள் உடல்மொழியில் காட்டும் பணிவே எங்களை எசமானாக்கிவிடும். ஆனாலும் நாங்கள் நிச்சயம் சர்வாதிகார எசமான் அல்ல என்பதை என்னால் தெளிவாகவும் உறுதியாகவும் சொல்ல முடியும். ஏனெனில் எனக்கு அதை யூகிப்பதற்கான வயதும்
தகுதி யும் வந்து நிறைய வருடங்கள் ஆகியிருந்தன.</p