கடிதங்கள் என்னும் கண்ணாடி
கட்டுரை
கடிதங்கள் என்னும் கண்ணாடி
பாவண்ணன்
இந்தியப் பிரதமராகப் 1966-1977, 1980-1984 ஆகிய இரு காலகட்டங்களில் பதவியேற்று ஆட்சி புரிந்த இந்திரா காந்தியின் பெயரை நாம் எப்படி நினைவில் வைத்திருக்கிறோம்?
வங்கிகளை நாட்டுடைமையாக்கியவர், மன்னர் மானியங்களையும் சலுகை களையும் ஒழித்தவர், பங்களாதேஷ் உதயத்துக்காகப் பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட்டு வெற்றி கண்டவர், தேசம் தழுவிய நெருக்கடி நிலையை அறிவித்துக் கட்சி பேதமின்றித் தம்மை எதிர்த்தவர்கள் அனைவரையும் விசாரணையின்றிச் சிறையில் அடைத்தவர், பொற்கோவில் வளாகத்துக்குள் ராணுவ நடவடிக்கையை அனுமதித்தவர் என்னும் விடைகளையே பெரும்பாலானோர் சொல்லக்கூடும்; அது உண்மையும்கூ