ஆ.இரா. வேங்கடாசலபதியின் 'தமிழ்க் கதாபாத்திரங்கள்'
பெங்களூர் குறிப்பு
ப. சகதேவன்
ஆ.இரா. வேங்கடாசலபதியின்
‘தமிழ்க் கதாபாத்திரங்கள்’
பெங்களூர் பன்னாட்டு மையம் உருவாவதற்குக் காரணமாக இருந்த ஆளுமைகள் தற்போது அறுபது வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள். கடந்த நூற்றாண்டின் இறுதியில், குறிப்பாக 1970-2000 காலப்பகுதியில் நிலவிய கலை, இலக்கிய, பண்பாட்டுப் போக்குகளை உன்னிப்பாகக் கவனித்திருப்பார்கள். தங்கள் மொழிகளில் வெளியான அப்போதைய கலை, இலக்கிய வெளிப்பாடுகளை இவர்கள் ரசித்து அனுபவித்திருந்திருக்கலாம். ஆங்கிலத்தில் போதிய பயிற்சி இருந்தபோதிலும் தங்கள் மொழியிலேயே பேசுவார்கள்.